LATEST NEWS
“அடப்பாவமே.. இது ஒன்னுதான் பாக்கி… அடுத்து ஆயுர்வேத சரக்கா..?” ஆயுர்வேத ஹூக்கா செஞ்சு காட்டிய பாபா ராம்தேவ்… நெட்டிசன்கள் செம்ம கலாய்..!!
இன்றைய இளைஞர்களிடையே ஈ-சிகரெட் மற்றும் சுவையூட்டப்பட்ட ஹூக்கா பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வரும் சூழலில், பாபா ராம்தேவ் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் ஹூக்கா பற்றிய வீடியோவில் பேசியுள்ளார். அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா சிங்கி மற்றும் நாட்டு கற்பூரம் போன்ற மூலிகைப் பொருட்களைக் கொண்டு இந்த பாரம்பரிய பாணி ஹூக்கா தயாரிக்கப்படுவதாகவும், இது சுவாசப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த ஹூக்காவைத் தயாரிக்கும் முறையில், அதிமதுரத்தை சிறிதளவு இடித்து பசு நெய், மஞ்சள் மற்றும் கடுகுடன் கலக்க வேண்டும். பின்னர் கற்பூரத்தை ஹூக்கா தட்டில் வைத்து சூடாக்க வேண்டும் என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதன் புகையை உள்ளிழுப்பது மூக்கடைப்பு மற்றும் இருமலைக் குணப்படுத்த உதவும் என்றும், இது ஆயுர்வேதத்தின் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்த உதவும் என்றும் ராம்தேவ் கூறியுள்ளார். இருப்பினும், புகையை உள்ளிழுப்பது நுரையீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதற்குப் போதிய அறிவியல் பூர்வ ஆதாரங்கள் இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இணையவாசிகள் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இது ஒன்றுதான் பாக்கியாக இருந்தது, அடுத்து பாபா ராம்தேவ் ஆயுர்வேத மதுபானத்தைக் கூட முயன்று பார்க்கலாம்” என்று சிலர் கிண்டலாகக் கூறியுள்ளனர். மேலும் பலர், எந்தவொரு பொருளை எரித்தாலும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்கள் உருவாகி நுரையீரலை பாதிக்கும் என்றும், இது ஆரோக்கியத்திற்குப் பதிலாக ஆஸ்துமா, மூச்சுக்கிழாய் அழற்சி போன்ற பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
