LATEST NEWS
தூத்துக்குடியில் அதிர்ச்சி ..!பிரீசர் பாக்ஸிற்கு கரண்ட் கொடுத்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து மரணம்.. துக்க வீட்டில் நடந்த துயர சம்பவம்..!!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த முத்துசசி (25) என்ற வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் (70) என்ற மூதாட்டியின் துக்க வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே இறந்த மூதாட்டியின் பிரேதத்தை வைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட குளிர்சாதனப் பெட்டிக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் அவர் உதவியாக ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துசசி மீது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் முத்துசசி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
