LATEST NEWS
தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி..! விநாயகர் ஊர்வலத்தில் கொலை.. சென்னையில் பதற்றம்..!!
சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட திடீர் மோதலில், சீனிவாசன் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சாதாரண வாய்த்தகராறு, எதிர்பாராதவிதமாகப் பயங்கரக் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலில் பலத்த காயமடைந்த சீனிவாசன், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், தலைநகரம் “கொலை நகரமாக” மாறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இத்தகைய சூழலில், பல்லாயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதே இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும் மேலும் கடுமையான அரசியல் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
