LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு..! மாஜி அமைச்சர் சேகர் பாபு மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் திமுகவினர்…!!
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாக, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சேகர்பாபு, முதலமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களை பொது மேடையில் ஆபாசமாகவும், தரம் தாழ்ந்த வகையிலும் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த அதிரடி சட்டப் பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் ( இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கி கலவரத்தை மூட்டுதல், பொது அமைதியைக் கெடுக்கும் நோக்கில் வதந்திகளைப் பரப்புதல் மற்றும் அவதூறு விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான 7 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக சேகர்பாபுவைக் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
