LATEST NEWS
“பெத்த புள்ளையே வீட்டை விட்டு துரத்திட்டான் சார்…” சொத்தை பறித்துக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்திய மகன்… வீட்டின் பெற்றோர் கண்ணீர் தர்ணா..!
ஹைதராபாத் மியாப்பூர் இந்திரா ரெட்டி ஆல்வின் காலனியில், தேவுலபள்ளி லட்சுமணன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினர் தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய தங்கள் மகனின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்குத் தெரியாமல் தங்களது வீட்டை விற்பனை செய்ய முயன்றதாகவும், தங்களை வீட்டை விட்டு விரட்டியடித்ததாகவும் கூறி அவர்கள் இந்தத் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சொந்த மகனும், மருமகளும் தங்களைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி, வீட்டை விட்டு விரட்டியடித்ததாக முதிய தம்பதியினர் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கு நேர்ந்த இந்த அநீதிக்குக் காவல்துறையினரும், அதிகாரிகளும் தலையிட்டு உரிய நீதி பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர்களைப் பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றுவது மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வது போன்ற செயல்கள் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த முதிய தம்பதியினரின் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
