LATEST NEWS
மதுராந்தகத்தில் பரபரப்பு..! அதிமுக வேட்புமனு தாக்கலை புறக்கணித்த அன்புமணி… உடைகிறதா NDA கூட்டணி..?!
இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், பாமக தலைவர் அன்புமணியை அவர்கள் யாரும் இன்னும் சந்திக்கவில்லை.
அதேபோன்று மதுராந்தகத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் நிகழ்விலும் பாமக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. கூட்டணித் தலைவர்களின் இந்த நகர்வுகளும், பாமகவின் புறக்கணிப்பும் NDA கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு, கூட்டணி உடைகிறதோ என்ற பலத்த கேள்வியையும் சந்தேகத்தையும் தற்போது தீவிரமாக எழுப்பியுள்ளது.
