Uncategorized
செருப்புக்குள் தேர்வுத்தாள் … ₹8,000-க்கு விற்கப்பட்ட TET வினாத்தாள்கள்: 16 பேர் அதிரடி கை!
மகாராஷ்டரா மாநிலத்தின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வினாத்தாள்களை அச்சகத்தில் இருந்து காலணிகளுக்குள் (Shoes) மறைத்து வைத்துத் திருடி, ₹8,000-க்கு விற்பனை செய்த அதிர்ச்சி தரும் மோசடி அம்பலமாகியுள்ளது. ஆக்ராவில் உள்ள ‘மஹிம் பத்ரன் பிரைவேட் லிமிடெட்’ என்ற தனியார் அச்சகத்தில் இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டபோது, அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவர் மற்றும் ஒரு முன்னாள் பணியாளர் இணைந்து இச்சதியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வின் ரகசியத்தைக் காக்க நான்கு தனித்தனி தொகுப்புகளாக (Sets) வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டிருந்த நிலையிலும், பாதுகாப்பு சோதனைகளை மீறி அவற்றை இவர்கள் காலணிக்குள் மடித்து வைத்து வெளியே கடத்தியுள்ளனர்.
இக்கடத்தல் வினாத்தாள்களை மகாராஷ்டிராவின் பிவண்டி பகுதியில் ஒருவருக்கு விற்பனை செய்ய முயன்றபோது, மூன்று பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த மாநிலங்களுக்கு இடையேயான வினாத்தாள் கசிவு மோசடியின் முக்கியக் குற்றவாளியாக, முன்னாள் பயிற்சி வகுப்பு ஆசிரியரான குப்தா என்பவரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு ஒடிசா மாநிலத்தில் இதற்கு முன் நடைபெற்ற மற்றொரு தேர்வுத்தாள் கசிவு வழக்கிலும் நெருங்கிய தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வினாத்தாள் கசிவு சதித் திட்டம் தொடர்பாகப் புலனாய்வு செய்த போலீசார், பிவண்டி உள்ளூர் நீதிமன்றத்தில் மொத்தம் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளிகளான அசோக் சாவ் மற்றும் பிரகாஷ் மிசால் ஆகிய இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
