TRENDING
உன்னிடம் தனியாக பேசணும்’… “ஹோட்டலில் ரூம்”… பின் நடந்த கொடுமை! தொடர்ந்து செ***ஸ் டார்ச்சர்.. “மருத்துவ மாணவிக்கு நடந்து வரும் அவலம்”…?
ஹரியானா மாநிலம் குர்கானை பகுதியை சேர்ந்த 25 வயதான தீபக் ராதே என்ற மாணவர். பெங்களூரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம்பயின்று வருகிறார். தன்னுடன் படித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மருத்துவ மாணவியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தனியாக உன்னிடம் பேச வேண்டும் என்று கூறி, ஜெயாநகரில் உள்ள லாட்ஜில் ரூம் போட்டு மாணவியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த மருத்துவ மாணவி, அழுது புலம்பி கொண்டு இருந்தார். பின்னர் மாணவர் ‘தனது பெற்றோரை சமாதானம் செய்து அடுத்த வருடம் உன்னை கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று உறுதி அளித்தார். மேலும் நமக்குள் நடந்த விஷயங்களை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்று காயப்படுத்தினர். இதனை நம்பி சென்ற மருத்துவ மாணவியை, அதன்பிறகு அவரிடம் பழகுவதை மாணவர் தவிர்த்து வந்துள்ளார்.
மேலும், காதலை பிரேக் அப் செய்துகொண்டதாக மாணவர் கூறிவந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மருத்துவ மாணவி கல்லூரியில் கழிப்பறைக்கு சென்ற போது பின்னாலே சென்று பலவந்தமாக உடல் பாகங்களை உரசி தவறு செய்ய முயற்சி செய்துள்ளார்.
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதிக்க சென்ற, மாணவியின் செல்ஃபோனை பிடிங்கி, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அளித்துள்ளார், மேலும் வேறு நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி மருத்துவ மாணவியை மிரட்டி உள்ளார் , மாணவர் செய்து வரும் தொடர் செக்ஸ் டார்ச்சரை பொறுத்து கொள்ள முடியாமல், பெங்களூர் காவல்நிலையத்தில் மாணவி புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படியில் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், இருவரும் ஓட்டல் அறையில் தங்கியது தெரியவந்தது, இதனால் மாணவருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார் மருத்துவ மாணவர் தீபக்கை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
