VIDEOS
புதிய டாட்டூ போட்ட நடிகை திரிஷா…. அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?…. லேட்டஸ்ட் புகைப்படம்…!!!
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது பல ஊர்களுக்கு ப்ரமோஷனுக்காக சென்று வருகிறார்.
இறுதியாக பொன்னியின் செல்வன் படக்குழு டெல்லி சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அந்த நிகழ்ச்சியில் நடிகை திரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டு உள்ள டேட்டோ தெரிய வந்துள்ளது. கேமராவை வைத்து அவர் ஒரு அழகிய டேட்டோ குத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
