LATEST NEWS
கைவிட்ட கணவர்…. தைரியமாக கைக்குழந்தையுடன் ஷுட்டிங் புறப்பட்ட சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்…. வைரல் வீடியோ…!!
சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதனைத் தொடர்ந்து கேளடி கண்மணி சீரியல் கதாநாயகனாக நடித்த அர்ணவை இரண்டு வருடத்திற்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு தனியாக ஒரே வீட்டில் இருவரும் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பின் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு ஒன்றாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. திவ்யா கர்ப்பமாக இருக்கும் தகவலை கூறிய சில வாரங்களில் அர்ணவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந்த பிரச்சனை போலீஸ் விசாரணை வரை சென்றது. இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது வரை பிறந்த குழந்தையை அர்னாவ் நேரில் சென்று பார்க்கவில்லை.
இந்நிலையில் கணவர் கைவிட்ட நிலையில் மீண்டும் சீரியல் ஷூட்டிங்கிற்கு திவ்யா ஸ்ரீதர் புறப்பட்டு உள்ளார்.அதுவும் கைக்குழந்தையுடன் தைரியமாக அவர் தனியாக சூட்டிங் சென்ற வீடியோவை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இதனைப் பார்த்த பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க