LATEST NEWS
“தம்பி… பொம்மைன்னு நினைச்சியா…?!” 2 சாரைப் பாம்புகளை அசால்ட்டாக பிடித்த 5 வயது சிறுவன்..! பார்த்து மிரண்டுபோன மக்கள்..!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஸ்டீலா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 27 அருகே ரிஸ்வான் என்ற 5 வயது சிறுவன், இரண்டு பெரிய தாமின் பாம்புகளைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
சிறுவன் ரிஸ்வான் எந்தவிதப் பயமும் இன்றி, இரண்டு பெரிய பாம்புகளையும் தன் கைகளில் ஏந்தி விளையாடுவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கே திரண்ட பொதுமக்கள் இக்காட்சியைத் தங்கள் கைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமின் பாம்புகள் பொதுவாக மனிதர்களுக்குப் பெரிய அளவில் நஞ்சில்லாதவை என்றாலும், ஒரு சிறிய குழந்தை இவ்வாறு பாம்புகளைக் கையாள்வது மிகவும் ஆபத்தானது என்று வனத்துறை மற்றும் பாம்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான செயல்களில் குழந்தைகள் ஈடுபடுவதைத் தடுக்க பெற்றோர்களும் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
