CRIME
“என் உடம்பை யாரும் வாங்காதீங்க” என் பொண்டாட்டி சுதந்திரமா வாழட்டும்… மனைவிக்காக உருகி உருகி வீடியோ பேசிவிட்டு வாலிபர் தூக்கில் தொங்கிய கணவர்.. பகீர் கிளப்பும் பின்னணி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மனஸ்தாபம் காரணமாகச் சோனு குமார் (22) என்ற வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோனு குமார் தான் காதலித்த பெண்ணையே பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சோகமான முடிவுக்கு முன்னதாக, சோனு குமார் தனது மனநிலையைப் பற்றியும், தனது மனைவி மற்றும் எதிர்காலம் குறித்த தனது எண்ணங்களைப் பற்றியும் ஒரு வீடியோ பதிவை விட்டுச் சென்றுள்ளார். அந்தப் பதிவில் தனது மனைவியின் மகிழ்ச்சி மற்றும் சுதந்திரம் குறித்த தனது விருப்பங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த வீடியோ பதிவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான முழுமையான காரணங்கள் குறித்து காவல்துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
