TRENDING
திருமணம் முடிந்த 2 ஆண்டுகள் ஆகியும் பிரிந்து வாழும் தம்பதியர்கள்..?? பாகிஸ்தானி என்பதால்…?? ட்விட்டரில் பரபரப்பு..
நாட்டு பிரச்சனையால் பிரிந்து வாழும் தம்பதியர்கள். தற்பொழுது வரை விசா கிடைக்கவில்லை என புகார் கொடுத்த பாகிஸ்தானிய பெண் இந்திய மருமகள் . பாகிஸ்தானை சேர்ந்தவர் சித்ரா ரபிக். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரமிஸ் ஆமன். சித்ரா ரபிக் இந்தியா வர தற்காலிக விசா கிடைத்ததால் .அவர்களுக்கு இரண்டு ஆண்டு முன்னர் 2017 நவம்பர் 22 யில் திருமணம் நடந்தது . பிறகு சித்ராவிற்கு விசா காலம் முடிந்ததால் தனது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டால் . ஆனால் தற்பொழுது வரை அவருக்கு விசா கிடைக்க வில்லை அவர் எப்பொழுது விசா வேண்டும் என்று மனு கொடுத்தாலும் அவரது மனு நிராகரிக்க பட்டு வருகிறது.
இதனால் எப்பொழுதுதான் எனக்கு விசா கிடைத்து என்கணவர்வுடன் நான் வாழப்போகிரேனோ என்று தெரியாவில்ல்லை என்று சித்ரா வருத்தத்துடன் கூறுகிறார். இருவருக்கும் 2017 லில் திருமணம் நடந்த பொழுது அப்பொழுது இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் எனக்கு தற்காலிக விசா கிடைக்க உதவினார், என்னை இந்தியாவின் மருமகள் என டுவிட்டரில் குறிப்பிட்டார். அவரால் தான் நான் இந்தியா வர நேர்ந்தது. ஆனால் அவர் இறந்த பின்பு வேறு யாரும் எனக்கு உதவவில்லை . அதனை பற்றி கேட்டால் விசா குறித்த விவரம் வைட்டிங்கில் உள்ளது என்று கூறுகிறார்கள் .
மேலும் இதனை பற்றி சித்ராவின் கணவர் ரமிஸ் ஆமன்விடம் கேட்கையில் நான் டெல்லியில் பணிபுரிகிறேன் , சித்ராவிற்கோ விசா கிடைத்தால் மட்டும்தான் அவளுக்கு என்னால் இந்தியா குடிவுரிமைக்கான விண்ணப்பங்களை எடுக்க மேற்கொள்ள முடியும் , ஆனால் அவளுக்கோ தற்பொழுது வரை தற்காலிக விசா கூட கிடைக்கவில்லை .மேலும் தற்பொழுது நிலவும் குடியுரிமை போராட்ட நிலையில் நங்கள் ஒன்று சேர்ந்து வாழமுடியுமா என்பது எங்களுக்கு அச்சத்தில் உள்ளாக்குகிறது என்று அவர் தெரிவித்தார். இருவரும் எங்களை வாழவிடுங்கள் என்று மனு கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.