LATEST NEWS
அன்னைக்கு அம்மா அழுதுட்டாங்க… OPS-ஐ சொந்த தம்பியா நினைச்சாங்க.. ரெண்டு முறை சிஎம் பதவியைக் கொடுத்தாங்க ஆனா.. பரபரப்பை கிளப்பும் ரபி பெரனார்ட் பேட்டி..!!
அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரபி பெரனார்ட், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட மனவேதனைகள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பு குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சட்டமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாக்கைத் துருத்தி ஆவேசமாகப் பேசிய சம்பவம் ஜெயலலிதாவை மிகவும் காயப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் இருவரும் ஒரே விருந்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருந்த நிலையில், பேரவையில் நடந்த இந்த எதிர்பாராத நிகழ்வு ஜெயலலிதாவுக்குப் பெரும் மனவேதனையை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய கரங்களில் ஒன்றாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், நெருக்கடியான காலகட்டங்களில் முதலமைச்சர் பதவியை இருமுறை ஏற்ற பிறகும், அதை எவ்வித தயக்கமுமின்றி மீண்டும் ஜெயலலிதாவிடமே ஒப்படைத்தார். இதனால் அவரைத் தனது சொந்தச் சகோதரரைப் போலக் கருதி ஜெயலலிதா மிகுந்த பாசமும் மரியாதையும் காட்டி வந்ததாக ரபி பெரனார்ட் நினைவு கூர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமியுடனான தலைமைப் போட்டியில் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய சூழலில் திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
