LATEST NEWS
“என்னது… ரயிலுல பிச்சை எடுத்தா மாசம் ரூ.1.9 லட்சமா…?” இது நிஜமா இல்ல ஸ்கிரிப்டா…? ரயிலில் இளைஞர்கள் பண்ண வேலையப் பாருங்க..!!
இந்திய இரயில்வே ரயில்களில் இரண்டு இளைஞர்கள் பிச்சை எடுத்து வெறும் 2 மணி நேரத்தில் ரூ.6,200 சம்பாதித்ததாகக் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்களில் பிச்சை எடுப்பதன் மூலம் எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்பதை சோதித்துப் பார்க்கும் ஒரு சமூகப் பரிசோதனையாக இதை நடத்தியதாக அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் இந்தத் தொகையைக் கண்டு ஆச்சரியமடைந்தாலும், பல இணையவாசிகள் இதன் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, இது வெறும் கவனத்தைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டப் போலி வீடியோ எனக் கூறி வருகின்றனர்.
அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களில் ஒருவன் தன்னை மாற்றுத்திறனாளி போலக் காட்டிக்கொண்டு நொண்டி நடந்தவாறு பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார்; மற்றொருவன் அவருக்கு உதவுமாறு பயணிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். பயணிகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் தாராளமாக பணம் கொடுத்ததாகவும், இதன் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் ரூ.6,200 சேர்ந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஒரு நபர் தினமும் 2 மணி நேரம் இதுபோல் பிச்சை எடுத்தால் மாதத்திற்குச் சுமார் ரூ.1.9 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்றும், இயலாமையைக் காட்டுபவர்களுக்கு மக்கள் அதிக பணம் தருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
https://www.instagram.com/reel/DbVsDWaTX2v/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ இணையத்தில் பயனர்களிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது. சிலர் இதை மக்களின் இரக்க குணத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு சுவாரஸ்யமான பரிசோதனை என்று கூறியுள்ள நிலையில், மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது சாத்தியமில்லை என்று பலர் விமர்சித்துள்ளனர். மேலும், இது உண்மையெனில் சமூகத்திற்கும் இரயில்வே பாதுகாப்பு நிர்வாகத்திற்கும் இது பெரிய கேள்விகளை எழுப்புவதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் இதுபோன்ற வீடியோக்கள் பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை என்பதால், அவற்றை உடனடியாக நம்பாமல் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
