TRENDING
40 வயதில் திருமணம்.. SJ சூர்யா பட நடிகையின் திடீர் அறிவுப்பு.. அதிர்ந்து போன ரசிகர்கள் ..
கோலிவுட் முதல் பாலிவுட் வரை சினி உலகையே கலக்கி வந்தவர் நடிகை மீரா சோப்ரா. இவர் தெலுங்கு சினிமாவிலேயே முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான “அன்பே ஆருயிரே” என்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
மேலும் இவர் தமிழில் ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜெகன் மோகினி, கில்லாடி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டே கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் மீரா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. 40 வயதை கடந்த நடிகை மீரா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் இவரின் திருமணம் ராஜஸ்தானில் வைத்து மார்ச் மாதம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். ஆனால், இவர் தனது கணவன் யார் என்பது பற்றி எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை.