“இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது”… கணவர் இல்லாத ஒரு மாதம்… சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா வெளியிட்ட உருக்கமான பதிவு..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

“இதை வார்த்தைகளால் சொல்ல முடியாது”… கணவர் இல்லாத ஒரு மாதம்… சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா வெளியிட்ட உருக்கமான பதிவு..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதன் பிறகு ஒரு சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த பிறகு ஸ்ருதி தன்னுடைய கணவரோடு எடுத்துக் கொண்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே அவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். தற்போது ஸ்ருதியின் கணவர் உயிரிழந்து ஒரு மாதம் ஆன நிலையில் கணவனின் நினைவு குறித்து ஸ்ருதி உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவில் , ஒரு உருவமாக இந்த ஒரு மாத காலம் நீங்கள் இல்லாமல் நான் உடைந்து நொறுங்கி வழியில் மூழ்கும் போதெல்லாம் உங்களுடைய ஆன்மா என் மீது அன்பையும் வலிமையையும் பொழிகின்றது.

Advertisement

என்னை சுற்றி நீங்கள் இருப்பதை நான் எப்படி உணர்கிறேன் என்பதை யாரிடத்திலும் கூற முடியாது. நம்மால் மட்டுமே அதனை உணர முடியும். நீங்கள் என்றுமே என்னுடைய பாதுகாவலராக என்னுடைய ஏஞ்சலாக இருப்பீர்கள் என்பதை நான் நம்புகிறேன். ஐ லவ் யூ அரவிந்த் என்று உருக்கமாக பதிவிட்டுள்ள நிலையில் தற்போது அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sruthi Shanmuga Priya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sruthi_shanmuga_priya)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in