LATEST NEWS
“அம்மா ரெண்டு நாள்ல வந்து கூட்டிட்டு போறேன்மா..!” மகனின் வார்த்தையை நம்பி இறுதி மூச்சு வரை காத்திருந்த 80 வயது தாய்… மரணத்திற்கு கூட வராத கல்நெஞ்சக்கார பிள்ளை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவரின் கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இரண்டு நாளில் திரும்பி வருகிறேன்” என்று கூறிச் சென்ற தன் மகன், கண்டிப்பாக மீண்டும் வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் அவர் அங்கேயே காத்திருந்துள்ளார். ஆனால் காலம் கடந்தும் மகன் திரும்ப வராத நிலையில், அந்தத் தாயின் வாழ்க்கை அந்த ஆதரவற்றோர் இல்லத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.
மகன் மீது வைத்திருந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வயதான நிலையிலும் அந்தத் தாய் கடைசி வரை கைவிடவில்லை. எப்போது வந்தாலும் மகனுடன் செல்லத் தயாராக, அவரது வருகையை மட்டுமே எதிர்நோக்கி நீண்ட காலம் அவர் காத்திருந்துள்ளார். அவ்வாறு காத்திருந்தபடியே அவர் உயிரிழந்தபோதும் கூட மகன் வரவில்லை. இதனால், அங்குள்ள இல்ல நிர்வாகத்தினரே அவருக்கு ஆதரவாக இருந்து இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நடத்தி முடித்துள்ளனர்.
தன் மகன் வருவான் என்ற ஓயாத நம்பிக்கையுடனே மறைந்த அந்தத் தாயின் சோகக் கதை அப்பகுதி மக்களைப் பெரிதும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வயதான காலத்தில் பெற்றோருக்குத் தேவைப்படும் அன்பையும் அரவணைப்பையும் குடும்பத்தினர் தராமல் கைவிடும் நிலை மாற வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, முதியவர்கள் ஆதரவின்றி தவிக்கும் சூழல் உருவாகக் கூடாது எனப் பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
