LATEST NEWS
“இனி கோட்டைப் பக்கமே வரக்கூடாது” எந்த விஷயத்திலும் தலையிடக்கூடாது… ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் டை கோட்டையை விட்டே துரத்திய முதல்வர் விஜய்.. நடந்தது என்ன..?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அந்தப் பதவியை இழந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டின் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி பொறுப்பும் தற்போது அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வப் பொறுப்புகளும் இதன் மூலம் முழுமையாகப் பறிபோயுள்ளன.
தலைமைச் செயலக வட்டாரங்களின்படி, முதல்வரின் பெயரைப் பல்வேறு இடங்களில் அவர் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தி வந்ததே இந்த உடனடி நடவடிக்கைக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. தனது சொந்த ஆதாயங்களுக்காகவும், அதிகார பலத்தைக் காட்டுவதற்காகவும் முதல்வரின் பெயரைப் பயன்படுத்திய விவகாரம் தலைமைக்குத் தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நீக்கத்தைத் தொடர்ந்து, ரிக்கி ராதன் பண்டிட் இனி கோட்டைப் பக்கமே வரக்கூடாது என்று அரசுத் தரப்பில் மிகவும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், அரசு சார்ந்த எந்தவொரு விவகாரங்களிலும் அவர் தலையிடக் கூடாது என வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
