LATEST NEWS
பேருந்துக்குள் துணி விரித்து உல்லாசமாக இருந்த ஜோடி… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…! மிரள வைக்கும் சம்பவம்…!!
கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சிறிய ரக பேருந்து (மினிபஸ்) ஒன்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்திற்குள் ரகசியமாகக் நுழைந்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் திசையைச் சாதுரியமாக வேறு பக்கமாகத் திருப்பி விட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் இருவரும் பேருந்தின் உள்பகுதியில் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு தங்களது உடைகளைச் சீரமைத்துக் கொண்டு, அங்கிருந்து எவ்வித பயமுமின்றி அந்த ஜோடி வெளியேறிச் சென்றுள்ளது.
மறுநாள் காலையில் பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் உள்ளே இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த அதிர்ச்சிகரமான அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பேருந்திற்குள் நுழைந்த காதல் ஜோடி யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விபரங்கள் தற்போதைக்கு அறியப்படவில்லை. எனினும், அவர்கள் கேமராவைத் திருப்புவது மற்றும் உள்ளே அநாகரிகமாக நடந்துகொள்வது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன. பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனத்தில் இத்தகைய அநாகரிகச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் காவல் துறையினர் உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
