LATEST NEWS
மரண பயம் வந்துட்டு… இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக்கூடாது என அங்கிருந்து கிளம்பிட்டேன்… விசிக மாநாடு குறித்து திருமா ஓபன் டாக்..!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநாட்டில், மரண பயம் ஏற்படும் அளவுக்குக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் . மாநாட்டுப் பந்தலில் கட்டுக்கடங்காத வகையில் குவிந்த மக்கள் கூட்டத்தால் அசாதாரண சூழல் உருவானதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
குறிப்பாக, மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கரூரில் முன்பு நடந்ததைப் போன்ற துயரமான அசம்பாவிதங்கள் எதுவும் இங்கு நடந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார் . இதனால், திட்டமிட்டபடி நீண்ட நேரம் உரையாற்றாமல், தனது உரையை மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டு மாநாட்டை முன்கூட்டியே நிறைவு செய்ததாகத் திருமாவளவன் கூறியுள்ளார்
