LATEST NEWS
நெத்தியில் பட்டையுடன் பிரபல கோவிலுக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்… வெளியான புகைப்படங்கள்…!!!
16வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கி பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்தது.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக தட்டித் தூக்கியது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைசர்ஸ் அணிக்காக விளையாடியவர் தான் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்.
இந்த சீசனில் இவர் 14 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக ஒரு சதை மற்றும் இரண்டு அரை சதம் உட்பட 404 ரன்கள் இவர் குவித்துள்ளார். இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 956 ரண்களும் குவித்துள்ளார்.
இந்த சீசனில் சதம் அடித்ததன் மூலமாக கே கே ஆர் வீரர் பிரண்டன் மெக்கலத்திற்கு பிறகு முதல் கே கே ஆர் வீரராக சதன் விலாசி இவர் சாதனை படைத்துள்ளார்.
மேலும் இவர் இந்த சீசனில் அதிகபட்சமாக 14 ரன்கள் வரை எடுத்துள்ளார். இருந்தாலும் பிளே ஆப் வாய்ப்பை இழந்த கே கே ஆர் ஐ பி எல் 16 வது சீசனில் இருந்து வெளியேறிவிட்டது.
தற்போது ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில் விடுமுறையை அனைவரும் களித்து வருகின்றனர்.
அதன்படி கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தமிழ்நாடு காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் மடத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதேசமயம் கோவில் வளாகத்தில் வேத பாடசாலை மாணவர்களுடன் இணைந்து இவர் கிரிக்கெட் விளையாடியும் உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விளையாட்டின் மீதான காதல் நம்ப முடியாதது.
அதேசமயம் வட மாநிலத்தில் உள்ள jai shree mahakal கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
அதுமட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் கோவிலுக்கு வந்த வெங்கடேஷ் ஐயர் அங்கு உள்ள வேத பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்தும் கிரிக்கெட் விளையாடியும் மகிழ்ந்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
