LATEST NEWS
அட பாவிகளா என்னடா இப்படி பண்றீங்க..! ஆப்பிள் லாரி கவிழ்ந்ததும் ஓடிவந்த கூட்டம்…. அப்புறம் செய்த காரியத்தை நீங்களே பாருங்க.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!!
வாரங்கல் – கம்மம் தேசிய நெடுஞ்சாலையில், ஆப்பிள் பழங்களை ஏற்றிச் சென்ற டிசிஎம் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தத் திடுக்கிடும் சம்பவம் மகபூபாபாத் மாவட்டம், தோரூர் மண்டலத்தில் உள்ள மாட்டேடு கிராம எல்லைப் பகுதியில் நடந்துள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே, லாரியில் இருந்த ஆப்பிள் பழங்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடந்தன.
వరంగల్ – ఖమ్మం జాతీయ రహదారిపై అదుపుతప్పి బోల్తా పడిన ఆపిల్ పండ్ల లోడుతో వెళ్తున్న డీసీఎం
ఆపిల్ పండ్ల కోసం ఎగబడిన జనాలు.. నిమిషాల్లోనే డీసీఎం పండ్లు లూటీ
మహబూబాబాద్ జిల్లా తొర్రూరు మండలం మాటేడు గ్రామ స్టేజ్ వద్ద ఘటన pic.twitter.com/ZPA0SBCtNm— Telugu Scribe (@TeluguScribe) July 30, 2026
இதைக் கண்ட அப்பகுதி மக்களும், வழியே சென்ற வாகன ஓட்டிகளும் உடனடியாக அங்கே திரண்டனர். விபத்துக்குள்ளான ஓட்டுநருக்கு உதவுவதற்குப் பதிலாக, சாலையில் சிதறிக்கிடந்த ஆப்பிள் பழங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அள்ளிச் செல்லத் தொடங்கினர். சில நிமிடங்களிலேயே லாரியில் இருந்த ஆப்பிள் பழங்கள் அனைத்தும் மக்களால் சூறையாடப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
