VIDEOS
பிரபல நடிகையிடம் இருந்து இரவு 10 மணிக்கு வந்த போன் கால்… அடுத்து என்ன நடந்தது?… இயக்குனர் அமீர் ஓபன் டாக்..!!
நடிகர் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானவர்தான் அமீர். அதன் பிறகு கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் திரைப்படத்தை இவர் இயக்கிய நிலையில் இன்னும் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களை இயக்கி வந்த அமீர் சில படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடித்திருப்பார். இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்தும் பல திரைப்படங்களை இயக்கியும் வந்த அமீர் சமீபத்தில் புது பிசினஸை தொடங்கினார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே இவர் புதிய ரெஸ்டாரன்ட் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அமீர் கலந்து கொண்ட நிலையில், அந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரபல நடிகை ஒருவரை குறித்து சில தகவல்களை பகிர்ந்தார். அதாவது இரவு 10 மணி அளவில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு போன் கால் செய்ததாகவும் அவருடைய பெயரை தான் சொல்ல விரும்பவில்லை என்று கூறி சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/mGN9egvapKI
