LATEST NEWS
பகீர்..! ஐயோ கடவுளே மறுபடியுமா..? நேபாளத்தில் மீண்டும் புதிய வெள்ள எச்சரிக்கை… கடும் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!!
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி இமயமலை பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாறைகள், மண் மற்றும் சேறு சகதிகளுடன் சீறிப்பாய்ந்த இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல்வேறு நீர்மின் திட்டப்பகுதிகளில் பணியாற்றிய 894 பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை என்றும், அதில் 500-க்கும் மேற்பட்டோர் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
தற்போது ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் 2-வது வாரமாக தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், தலைநகர் காத்மாண்டுவை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேபாளத்தின் கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களுக்கு மீண்டும் புதிய வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷி, நாராயணி, பாக்மதி உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டத்தின் கள நிலவரத்தை உடனுக்குடன் ஆய்வு செய்ய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
