LATEST NEWS
“ஊரே அழிஞ்சாலும் என் முதலாளியை விட்டுட்டு வரமாட்டேன்..!” நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உரிமையாளர்களுக்காக உருகும் நாய்… கண்களைக் குளமாக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது உரிமையாளர்களின் வருகைக்காக, அவர்கள் வளர்த்த நாய் ஒன்று வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே பல நாட்களாகக் கவலையுடன் காத்திருக்கும் நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் கண்களைக் குளமாக்கி வருகின்றன. நேபாளத்தில் அண்மையில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-த்தை நெருங்கியுள்ளதோடு, 3,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். குறிப்பாக, திரிசூலி பஜார் மற்றும் ரசுவா பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பல வீடுகள் அடியோடு அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த மாபெரும் பேரழிவின் போது மனிதர்களோடு வாழ்ந்த செல்லப்பிராணிகளின் விசுவாசக் கதைகள் பல தற்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ளன.
திரிசூலி பஜாரில் வெள்ளத்தால் சிதைந்த வீடுகளின் இடிபாடுகளுக்கு இடையே, கழுத்தில் பட்டை கழற்றப்படாமல் இருக்கும் ஒரு கருப்பு-வெள்ளை நாய் தன் முதலாளிகள் எப்போது வருவார்கள் என்ற ஏக்கத்தில் அதே இடத்திலேயே படுத்துக் கிடக்கிறது. அங்கு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், அந்த நாய் தன் எல்லையை விட்டு ஒரு அடி கூட நகர மறுத்துவிட்டது. அது யாரையும் அருகில் அண்டவிடாத காரணத்தால், விலங்கு நல ஆர்வலர்கள் அதற்குத் தேவையான உலர் உணவுகளையும் தண்ணீரையும் தூரத்திலிருந்தே வழங்கிப் பாசத்துடன் பராமரித்து வருகின்றனர். நல்வாய்ப்பாக ரசுவா போன்ற சில பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கி 4 நாட்களாகத் தவித்த ‘ஸ்வீட்டி’ என்ற காது கேளாத வளர்ப்பு நாய் உட்பட சில ஜீவன்கள் பத்திரமாக மீட்கப்பட்டுத் தற்பொழுது தங்களது உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
