LATEST NEWS
அடேங்கப்பா..! ரூ.83 லட்சம் சம்பளம் தரும்கூகுள் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு.. பஞ்சாப் கிராமத்துல இறங்கி இப்படி ஒரு ஆர்கானிக் பிசினஸா..?! வைரலாகும் பஞ்சாப் இளைஞரின் மாஸ் கதை..!!
பஞ்சாபில் உள்ள பாடியாலா பகுதியைச் சேர்ந்த மந்தஜ் சிங் சித்து என்பவர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ.83 லட்சம் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்த இவர், 2018-இல் ஐதராபாத் கூகுள் கிளையில் சேர்ந்து, பின்னர் டப்ளின் குழுவிற்கு மாற்றப்பட்டார். எனினும், கார்ப்பரேட் துறையின் அதிக வேலைப்பளு, ஒரே மாதிரியான பணிச்சூழல் மற்றும் நாம் எங்கே செல்கிறோம் என்ற கேள்வி அவரது மனதிற்குள் எழுந்தது. இதனால், 2022-ஆம் ஆண்டில் தனது ஆடம்பர கூகுள் வேலையைத் துறந்து, மீண்டும் சொந்த ஊரான பஞ்சாபிற்கே திரும்பி இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
சொந்த ஊர் திரும்பிய மந்தஜ், தனது உறவினரான டாக்டர் பல்ஜீத் சிங் கில் என்பவருடன் இணைந்து ‘கில் ஆர்கானிக்ஸ்’ என்ற இயற்கை விவசாய நிறுவனத்தைத் தொடங்கினார். 94 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்த இவர்களது தாத்தா சர்தார் பல்தேவ் சிங் சித்துவின் இயற்கை வாழ்வியல் முறையே இவர்களுக்கு முதன்மைத் தூண்டுகோலாக அமைந்தது. பாடியாலாவில் உள்ள ஃபதேபூர் கிராமத்தில் உள்ள தங்களது குடும்பப் பண்ணையிலேயே இவர்கள் இந்த விவசாயத் தொழிலை அமைத்தனர். ரசாயனங்கள் இல்லாத, தூய்மையான உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இவர்களது முதன்மை நோக்கமாக இருந்தது.
https://www.instagram.com/reel/DE7Y5BkNAFT/?utm_source=ig_web_button_share_sheet
இவர்களது பண்ணையில் காய்கறிகள் விற்பனை செய்யும் முறை மிகவும் தனித்துவமானது. நகரங்களில் வாழும் குடும்பங்களுக்குப் பண்ணையின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு அவர்களுக்காகப் பருவக்கால காய்கறிகள் இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன. இக்குடும்பங்கள் நேரடியாகப் பண்ணைக்கு வந்து காய்கறிகளைப் பறித்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக வீட்டிற்கே டெலிவரியும் பெற்றுக் கொள்ளலாம். ‘ஆர்கானிக்’ என்ற பெயர் தவறாகப் பயன்படுத்தப்படும் இக்காலத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதையே இலக்காகக் கொண்டு செயல்படும் இவர்களது பண்ணையில், தற்போது காய்கறி வாங்குவதற்கான காத்திருப்போர் பட்டியல் மிக நீண்டதாக மாறியுள்ளது.
