LATEST NEWS
“விஜயா? இல்லை ராகுல் காந்தியா? யார் அடுத்த பிரதமர்..!” திருச்சியில் வச்சு ஓப்பனா பேசிய அமைச்சர் விஸ்வநாதன்… தமிழக அரசியலில் புதிய பூகம்பம்..!!
தமிழகத்தில் தற்போதைய முதலமைச்சர் விஜய் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவுகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில், வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், கடந்த 15 ஆண்டுகளாக மத்தியில் உள்ள மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, பெரும் ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். எனவே, 2029-ஆம் ஆண்டில் ‘இந்தியா’ கூட்டணியின் சார்பில் ராகுல் காந்திதான் நிச்சயம் பிரதமராவார் என்றும், அவர் பிரதமராவதற்குத் தாங்கள் அனைவரும் ஒத்த குரலில் தங்களது முழுப் பங்களிப்பை அளித்துப் பணியாற்றுவோம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். விஜய் பிரதமர் என்ற தவெகவினரின் முழக்கத்திற்கு மத்தியில் காங்கிரஸ் அமைச்சரின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
