LATEST NEWS
CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! லண்டனில் இருந்து திரும்பியதும் அமைச்சர் பதவி பறிப்பு…? நிலைகுலைந்த அமைச்சர் சரத் குமார்..!!
முதலமைச்சர் விஜய் லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியதும், மாநில அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் ரகசிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதில் சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அமைச்சர் சரத் குமாரின் பதவி பறிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் அவருக்கு, மதுராந்தகம் இடைத்தேர்தல் பணி வழங்கப்படாமல் மாற்று அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
