LATEST NEWS
வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்…இளைஞர்களின் அக்கவுண்ட்டில் ₹4000…எலான் மஸ்க் கூட வியந்த இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டத்திற்கு விஜய் போடும் முற்றுப்புள்ளி…!
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைத் தொடங்கிய கையோடு, முதலமைச்சர் விஜய் அடுத்த அதிரடித் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு தற்போது தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சென்னை கிண்டியில் நடைபெற்ற அரசு தொழிற்பயிற்சி நிலைய (ITI) மாணவர் சேர்க்கை விழாவில் கலந்துகொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உயர்கல்வி படித்து முடித்தும் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களின் இடைக்காலப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே தவெக-வின் முதன்மைக் கொள்கையாக முன்வைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, வேலை தேடும் பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாயும், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் 2,500 ரூபாயும் ‘இளைஞர் நல நிதி’யாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தத் திட்டத்திற்கான தகுதி வரம்புகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும், இதற்கான அரசாணை மிக விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐடிஐ-களில் பயிலும் மாணவர்களுக்குக் கல்விக் கட்டணமின்றி மாதம் 750 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, ‘புதுமைப்பெண்’ மற்றும் ‘தமிழ்புதல்வன்’ திட்டங்களின் கீழ் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையும் தடையின்றி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய மாதாந்திர உதவித்தொகைத் திட்டமும் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நிதி ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, பட்ஜெட்டைத் தொடர்ந்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
