LATEST NEWS
“அரசு பற்றி இவங்க ரெண்டு பேரு மட்டும் தான் பேசணும்…!” அமைச்சர்களுக்கு CM விஜய் போட்ட புது உத்தரவு..!!
அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய் கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகிய இருவர் மட்டுமே பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி மட்டுமே பொதுவெளியில் பேச வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்து அமைச்சர் வினோத் முன்கூட்டியே பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
