TRENDING
துண்டுதுண்டாக கிடந்த நண்பனின் உடல்.. தூக்கில் தொங்கிய தாயின் அவலம்.. திரைப்படத்தின் வரும் காட்சிகள் போல் அரங்கேரிய கோரம்..திடுக்கிடும் தகவல் ..
கேரளாவில் கோழிக்கூடு அருகே வசித்து வந்தவர் ஜெயவள்ளி. இவருக்கு ஒரு மகன் உள்ளார் . அவர்தான் விர்ஜு (53). தன் தாய் ஜெயவள்ளியிடம் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்ற சொல்லி பலமுறை மகன் விர்ஜு கேட்டு தொந்தரவு செய்து உள்ளான். ஆனால் தாய் ஜெயவள்ளி மறுப்பு தெரிவித்ததால் தாயை கொலை செய்ய முடிவு செய்துவுள்ளார் மகன் விர்ஜு. அதனால் தனது நண்பன் இஸ்மாயிலை உதவிக்கு அணுகியுள்ளான்.ஆனால் நண்பன் இஸ்மாயில் 2 லட்சம் பணம் கேட்டு உள்ளான் கொள்ளை செய்வதற்காக.
இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு தூங்கிக்கொண்டு இருந்த தாய் ஜெயவள்ளியை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பின்பு தூக்கில் மாட்டிவிட்டார்கள். உறவினர்களிடம் தன் தாய் தூக்கு போட்டு இறந்து விட்டால் என்று நாடகம் ஆடியுள்ளார். இந்த விஷயத்தை பற்றி காவல்நிலையத்திற்கு புகார் எதுவும் அளிக்கவில்லை . மேலும் நண்பன் இஸ்மாயில் 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் கடந்த 2017 ஆம் ஆண்டு கடற்கரையில் துண்டு துண்டாக சாக்கு பையில் பிணம் ஒன்று கண்டுஎடுக்க பட்டு அந்த நபர் விர்ஜு நண்பர் இஸ்மாயில் ஆவர் என்று கண்டு பிடிக்கப்பட்டது .
அதனால் விர்ஜு இடம் விசாரணை தொடங்க முடிவு செய்ததை அறிந்து கொண்டு அவர் தலைமறைவாகிவிட்டார் . தலைமறைவான விர்ஜு கைது செய்து விசாரிக்கையில் நண்பன் பணம் கேட்டு மிரட்டியதால் அவரை குடிக்கவைத்து பிறகு கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சாக்குப்பையில் கட்டிப்போட்டு வீசியதாக ஒப்புக்கொண்டார் வீர்ராஜ். இந்த வழக்கு இன்று நிலுவைக்கு வந்து வழக்கின் தீர்ப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
