TRENDING
தமிழ் நாட்டில் கொடுமையிலும் கொடுமை : “பெண்கள் தங்களின் கரு முட்டை , மற்றும் சிறுநீரகம் விற்கும்” அவலம் ஏன்..! இந்த நிலைமை தெரியுமா…?
பணத்துக்காக தங்களின் கருமுட்டைகள், சிறுநீரகத்தைவிற்கும் தமிழ்ப் பெண்கள் விற்பனை செய்வதாக வரும் செய்திகள் பூதாகரமாக வெடித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் போட்ட டிவீட்டில்; மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஈரோடு பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் விசைத்தறி குடிசைத்தொழிலாக நடைபெற்று வந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால், ஈரோடு-நாமக்கல் ஆகிய இரண்டு மாவட்ட விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு வரலாறு காணாத வறுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, அங்குள்ள பெண்கள் தங்களின் வறுமையைப் போக்கி பணம் பெற தங்களின் கருமுட்டை மற்றும் சிறுநீரகத்தை விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிர்கொள்வதற்காக, பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்ற நெஞ்சைப் பிளக்கும் செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது.
#ModiGovt ன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, #admkantipplgovt ன் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு-நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு, கொடிய வறுமையால் பெண்கள் தங்களின் கருமுட்டையை விற்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளதாக நெஞ்சைப் பிளக்கும் செய்தி @thenewsminute வெளியாகியுள்ளது https://t.co/js9lajs0yk
— M.K.Stalin (@mkstalin) February 25, 2020
அத்துடன் சிறுநீரகத்தை விற்கும் அவலமும் தொடர்ந்து அரங்கேறுகிறது. பெண்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கி, குடும்பங்களில் வன்முறையை விதைக்கும் இந்த அவலம் எப்போது முடிவுக்கு வரும்? பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடும் அதிமுக ஊழல் அரசு இதில் உண்மையான அக்கறை காட்டுமா?
பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோர் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவார்களா? என மு.க.ஸ்டாலின் வேதனையுடன் கேள்வியெழுப்பியுள்ளார்.