LATEST NEWS
“அம்மா மேல சத்தியமா 150 தடவை போயிருக்கேன்..! தாய்லாந்தில் இந்தியர்களை வியப்பில் ஆழ்த்திய ஜெர்மன் மாமா..! 24 மணி நேரத்தில் 57 லட்சம் பார்வைகளைக் குவித்த வைரல் வீடியோ..!!”
தாய்லாந்தில் சந்தித்த இந்தியர்களிடம் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு முதியவர் இந்தியா மீது தனக்கு இருக்கும் அளப்பரிய அன்பைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பலர் ஆங்கிலம் பேச முயற்சிக்கும் சூழலில், ஜெர்மனியைச் சேர்ந்த இந்த பெரியவர் இந்தி, போஜ்புரி மற்றும் மராத்தி போன்ற இந்திய மொழிகளில் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எத்தனை முறை சென்றுள்ளீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, “அம்மா மீது சத்தியமாக 150 முறை சென்றுள்ளேன்” என்று அசல் இந்திய பாணியில் பதிலளித்துள்ளார்.
தான் ஒரு சைவ உணவுப் பிரியர் என்று குறிப்பிட்ட அந்த ஜெர்மன் முதியவர், சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்தியா ஒரு சொர்க்கம் போன்றது என்று பாராட்டியுள்ளார். மேலும், “எனது இந்தியா மகத்தானது” என்று கூறி கம்பீரமாக சல்யூட் அடித்து, இந்திய கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை மீதான தனது ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். மராத்தி மொழியில் ‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று கூறிய அவர், போஜ்புரி மொழியிலும் பேசி அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
https://www.instagram.com/reel/Db0gtjyt57M/?utm_source=ig_web_button_share_sheet
சுபம் ஜெயின் மற்றும் தான்யா ஆகியோரின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பதிவேற்றப்பட்ட வெறும் 24 மணி நேரத்திற்குள் 57 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 4.75 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. உரையாடலின் போது அவர் ‘அம்மா மீது சத்தியமாக’ என்று இயல்பாகப் பேசிய விதம், அவரை ஒரு முழுமையான இந்தியராகவே மாற்றியிருப்பதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து பாராட்டி வருகின்றனர்.
