LATEST NEWS
காலையிலேயே மகிழ்ச்சியான செய்தி..! மகளிர் உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்வு ..!!
தமிழ்நாட்டில் மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திரத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்தத் தொகை உயர்வு, மகளிர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொகை உயர்வு அமலுக்கு வரும் நிலையில், தற்போது மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகையைப் பெற்று வரும் தகுதியுடைய பயனாளிகளுக்கே முதலில் இந்த ₹2,500 கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 15ஆம் தேதியன்று இந்த மாதத்திற்கான உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
எனவே, பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கிக் கணக்கு எண்களைச் சரியாக வைத்துள்ளீர்களா என்பதையும், இந்த மாதத்திற்கான பணம் தங்கு தடையின்றி சரியாக வந்து சேருகிறதா என்பதையும் முன்னெச்சரிக்கையாகச் சோதித்துப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த முக்கியத் தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
