குழந்தைக்கு நேர்ந்த மரணபயம் ..?? ஒரு நிமிடம் உறையவைத்த காட்சிகள் ..!! மயிரிழையில் தப்பிய சிறுவன்..!! - cinefeeds
Connect with us

TRENDING

குழந்தைக்கு நேர்ந்த மரணபயம் ..?? ஒரு நிமிடம் உறையவைத்த காட்சிகள் ..!! மயிரிழையில் தப்பிய சிறுவன்..!!

Published

on

வனவிலங்கு பூங்காவில் சிறு குழந்தைக்கு வந்த மரண நடுக்கம் . பார்த்தவர்களுக்கு வந்த பயம் அச்சத்தின் உச்சியில் இருந்த சிறுவன். அயர்லாந்தில் டப்ளின் விலங்கியல் பூங்காவிற்கு தனது பெற்றோருடன் சென்றிருந்த Sean என்ற குழந்தை, கண்ணாடி ஒன்றின் முன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான். பொதுவாக நாம் எதாவது ஒரு இடத்திற்கு சென்றால் அந்த இடத்தின் நினைவாக ஸெல்ப்பீ எடுத்து கொள்வார்கள் . அதுபோல் தான் இந்த சிறுவனின் தந்தையும் தான் மகன் Sean ஐ வைத்து போட்டோ எடுக்க நினைத்தார் .

அப்பொழுது அங்கு Sean பின்னாடி ஒரு சிறுத்தை பிதுங்கிக்கொண்டு அவன் பின்னாடி வந்து கொண்டு இருந்தது .அவனை பார்த்த படி அந்த சிறுத்தை வருவதை பார்த்த Sean தந்தை அவனிடம் உன்பின்னால் ஒரு சிறுத்தை வருகிறது என்று கூறினார். சிறுவன் Seanவும் சிறுத்தையை பார்க்க வேகமாக திரும்பவும் அந்த நொடியே சிறுத்தையும் சிறுவன் மீது பாய தொடங்கியது. அப்பொழுது சிறுவனுக்கும் சிறுத்தைக்கும் இடையில் ஒரு கண்ணாடி இருந்ததை வைத்து சிறுவன் உயிர் பிழைத்தான் .

Advertisement

ஆனால் அந்த சிறுத்தைக்கோ அதற்கு முன்னாள் அந்த சிறுவன் இருக்கிறான் என்று நினைத்து பாய தொடங்கியது . இந்த அசச்சுறுத்தும் செயலால் சிறுவன் Sean பயத்தில் நடுங்கினான் . இந்த காட்சியை அந்த பூங்காவிற்கு வந்த அனைவரும் பாத்து பயத்தில் ஒரு நிமிடம் உறைந்தனர். இது குறித்து Sean யின் தந்தையிடம் கேட்கையில் அவர் இந்த கண்ணாடி மட்டும் இல்லை என்றால் என்மகன் நிலை என்ன ஆகியிருக்கும் என்று வேடிக்கையாக பதில் கூறினார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in