CINEMA
“விவசாயி கஷ்டப்பட்டா எப்படி இருக்கும்…?” ஜனநாயகன் படக்கசிவு குறித்து தம்பி ராமையா வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரைக்கு வரும் முன்பே இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய நடிகர் தம்பி ராமையா, ஒரு விவசாயி கஷ்டப்பட்டு விளைவித்த பயிரை காட்டுப்பன்றிகள் வந்து நாசமாக்குவது போன்ற வேதனையை இந்தப் படக்குழுவினர் தற்போது அனுபவித்து வருவதாக உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், இணையத்தில் கசிந்த காட்சிகளைப் பார்க்காமல் தவிர்த்து வரும் உண்மையான விஜய் ரசிகர்களுக்கு, திரையுலகைக் காப்பாற்றுவதற்காகத் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் நட்டி நட்ராஜ், பலரின் கடின உழைப்பிலும் பெரும் முதலீட்டிலும் உருவான இத்திரைப்படத்தை யாரும் இணையத்தில் பார்க்கவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என அன்புக்கட்டளை விடுத்துள்ளார். இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்திற்கு இழைக்கப்படும் இத்தகைய துரோகம் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது இந்தப் படக்கசிவு தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், குற்றவாளிகளைக் கண்டறியச் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
