LATEST NEWS
இபிஎஸ்-க்கு செம ஷாக்..! சொந்த தாய்மாமா மகனே அதிமுகவில் இருந்து அதிரடி விலகல்… “2 முறை சீட் தர மறுத்தார்” என பரபரப்பு குற்றசாட்டு..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு உரிய தகுதி இருந்தும் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இபிஎஸ் மீது அவர் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து கட்சியில் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் அதிருப்தியடைந்த கே.பி.எஸ்.ராஜா, தற்போது தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இபிஎஸ்-ஸின் சொந்த குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே அதிருப்தியில் விலகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
