LATEST NEWS
காலையிலேயே குட் நியூஸ்..! கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி.. வந்தது புதிய அப்டேட்..!
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்களின் விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகைக்கடன் தள்ளுபடி குறித்த புதிய அறிவிப்பு விரைவில் சர்ப்ரைஸாக வெளியாகலாம் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, 5 சவரன் வரையிலான சிறு நகைக்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான தகுதியான பயனாளிகளின் பட்டியலைத் துல்லியமாகத் தயாரிக்கும் நோக்கிலேயே இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இருப்பினும், இந்த நகைக்கடன் தள்ளுபடித் திட்டம் குறித்துத் தமிழ்நாடு அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் அல்லது இதற்கான தகுதி வரம்புகள் என்னென்ன என்பது போன்ற முழுமையான விவரங்கள் அரசாணை வெளியான பிறகே தெரியவரும்.
