LATEST NEWS
“என்ன கொடுமை சார் இது”… சிங்கம் சிங்கிளாத்தான் வரும்… ஆனா மாட்டைப் பார்த்தா டபுளா ஓடிடும் போலயே..! இன்ஸ்டாகிராமில் வரலாகும் வீடியோ..!!
குஜராத் மாநிலம் கிர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சாலையோரத்தில் காளை மாடு ஒன்று மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில், அந்த மாட்டிற்குத் தெரியாமல் அதன் பின்னால் இரண்டு சிங்கங்கள் மெதுவாக வேட்டையாடும் நோக்கத்தில் வருகின்றன. அதில் ஒரு சிங்கம் மாட்டின் மிக அருகில் சென்று, எந்த நேரத்திலும் அதன் மீது பாயத் தயாரான நிலையில் காத்திருக்கிறது.
சிங்கங்கள் தன் தலைக்கு மேல் நின்றுகொண்டிருந்த போதிலும், அந்த மாடு எவ்வித பயமும் இல்லாமல் மிகவும் நிதானமாக அமர்ந்திருந்தது. மாட்டின் இந்த அசாதாரணமான அமைதியையும் தைரியத்தையும் பார்த்து சிங்கங்கள் திடீரென மிரட்சியடைந்தன. எதிர்பாராத விதமாக, மாட்டைக் கண்டு பயந்த அந்த இரண்டு சிங்கங்களும் அங்கிருந்து பின்வாங்கி முன்னோக்கி ஓடத் தொடங்கின. சிங்கங்கள் தூரத்திற்கு ஓடிய பிறகுதான், அந்த மாடு மெதுவாக எழுந்து நின்று, சிங்கங்களுக்கு சவால் விடுவது போல கம்பீரமாக போஸ் கொடுத்துள்ளது.
https://www.instagram.com/reel/DadIueWOTSn/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். சிங்கங்களின் இந்த பயந்த சுபாவத்தையும், மாட்டின் மந்தமான எதிர்வினையையும் பார்த்து நெட்டிசன்கள் பலவாறாகக் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு பயனர், “மாடு எதிர்வினை கொடுக்கவே 7 வேலை நாட்களை எடுத்துக் கொண்டது” என வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இவை நிச்சயம் சைவ சிங்கங்களாகத்தான் இருக்க வேண்டும்” என்றும், “இது குஜராத் சிங்கங்கள் என்பதால் வேட்டையாடாமல் ஃபாஃப்டா, தோக்லா போன்ற உணவுகளைத் தேடுகின்றன போல” என்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
