CRIME
“அடப்பாவமே..! ஜின் பூதம் கட்டளையிட்டதால் கொலையா?..” 65 வயது பெரியவரை கொடூரமாக வெட்டிய சைக்கோ வாலிபர்.. போலீஸே அதிரவைத்த பகீர் வாக்குமூலம்..!!
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், ‘ஜின்’ உத்தரவிட்டதாகக் கூறி 65 வயதான சியாராம் ஸ்ரீவஸ்தவா என்ற வியாபாரியை கொடூரமாகக் கொலை செய்த முகமது அர்மான் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஸ்ரீவஸ்தவாவை, அர்மான் தான் ஓட்டி வந்த காரால் மோதித் தள்ளி, கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போஜிபுரா பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அர்மானை அடையாளம் கண்ட காவல்துறையினர், திங்களன்று அவரைக் கைது செய்தனர்.
விசாரணையின் போது, பெண் ஜின் ஒன்று தனக்குக் கட்டளையிட்டதன் பேரிலேயே இந்த கொலையைச் செய்ததாக அர்மான் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இக்கொலைச் சம்பவம் குறித்துத் தெரிந்தும் காவல்துறையிடம் தெரிவிக்காமல் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அர்மானின் தந்தையையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அர்மான் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
