LATEST NEWS
பெரும் சோகம்..! இணையத்தை கலக்கிய குதிரை வண்டி ஜாக்கி கணேசன் சாலை விபத்தில் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!
தென் மாவட்டங்களின் பாரம்பரியக் குதிரை வண்டிப் பந்தயங்களில் அதிவேகமாக வண்டியைச் செலுத்தி, சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கணேசன் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அனுபவமிக்க மூத்த ஜாக்கிகளுக்கு மத்தியில், தனது அசாத்திய திறமையால் மிகக் குறைந்த வயதிலேயே தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தவர் கணேசன். இவருடைய ஓட்டும் திறனைக் காண்பதற்கே பந்தயங்களில் பெருமளவில் கூட்டங்கள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் இளம் திறமையாளராக வலம் வந்த கணேசனின் குறுகிய வாழ்வு, எதிர்பாராத இந்தச் சாலை விபத்தின் மூலம் சோகத்தில் முடிந்தது ஒட்டுமொத்த விண்வெளி மற்றும் பந்தயப் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பந்தய வீரர்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
