LATEST NEWS
“எஸ்பிஐ ஏடிஎம்-ஆ? இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா?.. வங்கியையே அலறவிட்ட நபரின் விசித்திர ஐடியா.. விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்.. இணையத்தை ஆக்கிரமித்த வைரல் வீடியோ..!!
கோடைக்காலத்தின் கொளுத்தும் வெயிலையும் புழுக்கத்தையும் தாங்க முடியாத ஒரு நபர், அதிலிருந்து தப்பிக்க பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்தையே தற்காலிக வீடாக மாற்றியுள்ளார். வீட்டில் ஏசி இல்லாத காரணத்தால், ஏடிஎம் கேபினுக்குள் இருக்கும் குளுமையான ஏசி காற்றில் நிம்மதியாகத் தூங்குவதற்காக அவர் அங்கேயே படுத்துக் கொண்டார். இந்த விசித்திரமான மற்றும் வேடிக்கையான புகைப்படம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மவ் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
उमस भरी गर्मी से बचने के लिए एक शख्स SBI (भारतीय स्टेट बैंक) के ATM केबिन को ही आशियाना बना लिया। गर्मी ज्यादा थी, घर में AC था नहीं लिहाजा भाई साहब लेट लिए ATM के वातानुकूलित केबिन में। ये तस्वीर यूपी के जिला मऊ की है। pic.twitter.com/18cL5QEmuL— Shahnawaz(News24) (@Shahnawazreport) July 17, 2026
வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் குளிரூட்டிகளைப் பொருத்தி வெயிலை எளிதாகக் சமாளித்துவிடும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலைமை கோடைக் காலத்தில் எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படத்தைப் பகிரும் நெட்டிசன்கள், “ஏடிஎம் என்பது பணம் எடுக்கும் இடம் மட்டுமல்ல, ஏழைகளின் ஏசி பெட்ரூமும் கூட” என்று நகைச்சுவையாகவும், அதே சமயம் மக்களின் எதார்த்த நிலையை உணர்த்தும் விதமாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
