LATEST NEWS
“நாக்கில் தேன் தடவ மாட்டோம்” இதுதான் இப்போதைய நிலைமை.. நிஜத்தை போட்டுடைக்க முதல்வர் ரெடி.. பட்ஜெட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்..!
அரசின் கஜானாவில் போதிய நிதியிருப்பு இல்லாத காரணத்தால், அதிக நிதி ஒதுக்கீடு தேவைப்படும் புதிய பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை என்று நிதித்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைப் பராமரிப்பதற்கும், நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகளைச் சமாளிப்பதற்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்த உண்மை நிலவரத்தை மக்களிடம் மறைக்காமல் வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும் என்று முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசின் உண்மையான நிதி நிலைமையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதே, எதிர்காலத்தில் கொண்டு வரப்படும் சீர்திருத்தங்களுக்கும் நிதி மேலாண்மைக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, வரவிருக்கும் பட்ஜெட்டானது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையோ அல்லது சலுகைகளையோ அளிக்கும் “நாக்கில் தேன் தடவும்” பட்ஜெட்டாக இருக்காது என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மாறாக, நிதி நெருக்கடிகளைச் சீர்செய்து, தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால நீண்டகால வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளத்தையும் தொலைநோக்கு வழிகாட்டுதலையும் வழங்கும் அமைப்பிலேயே இது உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
