LATEST NEWS
BREAKING: மகளிருக்கு இலவசம்.. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!
மாநில பட்ஜெட்டில் மகளிர் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ‘வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு 100% அரசு மானியத்தில், அதாவது முற்றிலும் இலவசமாக 5 ஆடுகள் வழங்கப்படும். கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் சுயசார்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சுமார் 30,000 பேர் நேரடியாகப் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளிம்புநிலை பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடு வளர்ப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்காக அரசு சார்பில் நிதிநிலை அறிக்கையில் ₹110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
