CRIME
நெஞ்சை பதற வைக்கும் பகீர் சம்பவம்… வேறொரு நபருடன் சென்றதை தடுத்த காதலனை காரை ஏற்றிப் படுகொலை செய்த காதலி..! பதறவைக்கும் CCTV வீடியோ..!!
சத்தீஸ்கரில் காதலனை காதலியே காரை ஏற்றிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரம்ப்ரீத் என்பவரின் காதலி, வேறொரு நபருடன் காதலில் ஈடுபட்டு அவருடன் காரில் சென்றுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பரம்ப்ரீத், அவர்களின் காரை மறித்து நிறுத்த முயன்றுள்ளார்.
அவர் நிறுத்த முயன்றும் கார் நிற்காததால், பரம்ப்ரீத் காரின் முன்பகுதியில் ஏறியுள்ளார். எனினும், அதையும் பொருட்படுத்தாமல் காரை இயக்கிய காதலி, பரம்ப்ரீத் கீழே விழுந்ததும் அவர் மீதே காரை ஏற்றிச் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
