LATEST NEWS
BREAKING: தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக் காய்ச்சல்.. பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுரை..!!
தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் (H1N1) பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வெறும் 19 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக லேசான சளி, இருமல், காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுக வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
