BREAKING: “தமிழர்களை மீட்க அதிகாரிகள் உடனே களமிறங்குங்கள்” -நேபாள பேரிடர் குறித்து முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உததரவு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

BREAKING: “தமிழர்களை மீட்க அதிகாரிகள் உடனே களமிறங்குங்கள்” -நேபாள பேரிடர் குறித்து முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உததரவு..!!

Published

on

நேபாள வெள்ளப்பெருக்கு குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Advertisement

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in