Uncategorized
“குடிக்கவும் இல்லை… ஆனால் ஏன் அப்படிச் செய்தார்..?!” நடு வானில் கதவைத் திறக்கப் பார்த்த பயணி.. அடுத்த நொடியே சக பயணிகள் செய்த அந்த ஒரு காரியம்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
குவாலாலம்பூரிலிருந்து கொச்சிக்கு வந்த மலேசியாவின் படிக் ஏர் விமானத்தில், நடுவானில் பயணி ஒருவர் அவசரக்கால வெளியேற்றுக் கதவை திறக்க முயன்ற சம்பவம் சக பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, 36 வயதான அந்தப் பயணி திடீரென வன்முறையில் ஈடுபட்டு, அவசரக்கால கதவின் பாதுகாப்பு பேனலை உடைத்து கதவைத் திறக்க முயன்றார். பணிப்பெண்களும் சக பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டு, கடும் போராட்டத்திற்குப் பிறகு அவரை மடக்கிப் பிடித்துக் கட்டுப்படுத்தினர்.
Mid-Air Panic on Kuala Lumpur–Kochi Flight After Passenger Tries to Open Emergency Exit
What began as a routine flight from Kuala Lumpur to Kochi turned into a terrifying ordeal for everyone on board after a passenger allegedly attempted to open the aircraft’s emergency exit… pic.twitter.com/XZwJEPI9xr— SAFFRON LION (@SaffronlionX) August 6, 2026
இந்த பெரும் பரபரப்பிற்கு மத்தியிலும், விமானிகள் திறம்படச் செயல்பட்டு விமானத்தைக் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர். விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்புப் படையினர் அந்தப் பயணியைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் மது அருந்தியதற்கான அறிகுறிகள் எதுவும் தொடக்கப் புலனாய்வில் தெரியவில்லை என்ற போதிலும், விமானப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தது மற்றும் பயணிகளை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
