LATEST NEWS
எல்லாம் போச்சா..? ஆப்பு வைத்த CM விஜய்.. பரந்தூரில் ரியல் எஸ்டேட் சரிவு… ஏக்கர் ₹35 லட்சத்தில் இருந்து பாதாளத்திற்கு சரிந்தது… அவசரப்பட்டு வாங்கியவர்கள் தலையில் கை..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியின் ரியல் எஸ்டேட் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் முந்தைய திமுக அரசால் இத்திட்டம் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலங்களின் தேவை அசுர வேகத்தில் அதிகரித்தது. இதனால், அதுவரை ஒரு ஏக்கர் சுமார் ₹12 லட்சம் என விற்பனையாகி வந்த நிலங்களின் மதிப்பு, குறுகிய காலத்திலேயே ₹35 லட்சம் வரை மளமளவென உயர்ந்தது.
எனினும், விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை தவெக அரசு முழுமையாக ரத்து செய்துள்ளதால், அங்கு நிலவி வந்த முதலீட்டுச் சூழல் தலைகீழாக மாறியுள்ளது. விமான நிலையம் அமையும் என்ற அதீத எதிர்பார்ப்பில், எதிர்கால லாபத்தைக் கணக்குப்போட்டு அவசர அவசரமாக நிலங்களை வாங்கிய வெளிமாவட்ட முதலீட்டாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் தற்போது பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திட்டக் கைவிடல் அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலங்களின் சந்தை மதிப்பு 50% வரை அதிரடியாகச் சரிந்துள்ளது. அங்குள்ள நிலங்களை வாங்குவதற்கோ அல்லது அதிக விலை கொடுத்து கைமாற்றுவதற்கோ தற்போது எவரும் முன்வராததால், அப்பகுதியில் நில வியாபாரம் முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
